×

குழந்தையுடன் தாய் மாயம்

தில்லைநகர், ஜூலை 2: திருச்சி தென்னூரில் குழந்தையுடன் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி தென்னூர் வாமடம் பகுதியில் வசித்து வரும் ராஜ்- ஈஸ்வரி தம்பதியின் மகள் லோகேஸ்வரி (21). இவருக்கு திருமணமாகி கணவர் கணேசன், ஒன்றரை வயது மகனுடன் தென்னூர் ரஹ்மானியபுரம் பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக லோகேஸ்வரி தனது தாயார் ஈஸ்வரியுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மதியம் தனது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற லோகேஸ்வரி இதுவரை வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தாயார் ஈஸ்வரி தில்லைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்ஆய்வாளர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

The post குழந்தையுடன் தாய் மாயம் appeared first on Dinakaran.

Tags : Delhi Nagar ,Trichy Tenadore ,Trichy Tenthur Wamadam ,Dinakaran ,
× RELATED ராயனூர் கடைவீதி சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய கோரிக்கை